Our highlights
WhatsApp-Image-2024-02-26-at-11.06.38_66fe2ed0

ஒடியல் கூழ்

    Ingredients

    • ஒடியல் மா - 1/2 கிலோ

      மீன் - 1 கிலோ (வகை வகையான மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)

      நண்டு - 1/2 கிலோ

      இறால் - 1/4 கிலோ

      கணவாய் - 1/4 கிலோ

      நெத்தலி மீன் கருவாடு - 100 கிராம்

      பயிற்றங்காய் - 250 கிராம்

      பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)

      ஒரு பிடி கீரை அல்லது கீரை வகைகள் ஒரு பிடி

      அரிசி - 50 கிராம்

      பச்சை மிளகாய் - 10 இரண்டாக பிளந்தது

      செத்தல் மிளகாய் - 15 அரைத்தது

      பழப்புளி - 100 கிராம்

      உப்பு - சுவைக்கேற்ப

    Instructions

    1. முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில்/grinder நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானால் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

      இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால்,கணவாய்,நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

      நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

    ஒடியல் கூழ்

    Please enter a valid URL

    INGREDIENTS

    ஒடியல் மா – 1/2 கிலோ

    மீன் – 1 கிலோ (வகை வகையான மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)

    நண்டு – 1/2 கிலோ

    இறால் – 1/4 கிலோ

    கணவாய் – 1/4 கிலோ

    நெத்தலி மீன் கருவாடு – 100 கிராம்

    பயிற்றங்காய் – 250 கிராம்

    பலாக்கொட்டைகள் – 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)

    ஒரு பிடி கீரை அல்லது கீரை வகைகள் ஒரு பிடி

    அரிசி – 50 கிராம்

    பச்சை மிளகாய் – 10 இரண்டாக பிளந்தது

    செத்தல் மிளகாய் – 15 அரைத்தது

    பழப்புளி – 100 கிராம்

    உப்பு – சுவைக்கேற்ப

    INSTRUCTIONS

    முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில்/grinder நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானால் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

    இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால்,கணவாய்,நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

    நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.
    en_USEnglish